Friday, December 8, 2017

யாழில் ரயிலுக்குப் பதிலாக சொகுசு பஸ்கள் சேவையில்

Advertisement
ரயில் சேவைகள் இடம்பெறாததை அடுத்து கடுகதி ரயில் சேவைகளுக்கு பதிலாக சொகுசு பஸ்சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.


காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கடுகதி ரயில்சேவைகள் இடம்பெறாததினால் ஐந்து சொகுசு பஸ்வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ரயில் பிரிவில் இடம்பெற்று வரும் வேலைப்பகிஷ்கரிப்பின் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை 5600 பஸ்களை நாடுபூராகவும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த பஸ்களில் ரயில்வே பருவகாலச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக இலங்கை பஸ்சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று அதிகாலை அவசர அறிவிப்பு விடுத்து உள்ளார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: