Monday, December 11, 2017

காலநிலையில் திடீர் மாற்றம்..! ​பொதுமக்களே அவதானம்!

Advertisement
எதிர்வரும் தினங்களில் மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக கால நிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது..

காலநிலை அவதான நிலையத்தினால் இன்று காலை 5.30 இற்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கால நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் வட மேல் மாகாணங்களில் இவ்வாறான கால நிலை நிலவகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும்.

இதன்காரணமாக , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: