Sunday, December 10, 2017

இந்தியாவில் நிலநடுக்கம்

Advertisement
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் நேற்று இரவு நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, லே பகுதியில் இருந்து சுமார் 102 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் சீன எல்லை பகுதியிலும் உணரப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய தலைநகர் புதுடெல்லி, ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரமும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: