Sunday, December 10, 2017

யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்

Advertisement
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றி விட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும், இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கி விட்டது.
யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டேன். அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன். அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: