Monday, January 15, 2018

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்

Advertisement
நைஜீரியாவில் 4 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பிடித்து வைத்திருக்கும் வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கே சிபோக் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 270 பள்ளி மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து எவ்வித தகவலும் நீண்ட நாட்களுக்கு வெளிவராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகளை போகோ ஹரம் பயங்கரவாதிகளே கடத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராணுவத்தினர் தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளில் 12 பேர் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வருகின்றனர். அவர்களை பிடித்து வைத்திருப்பது போன்ற 21 நிமிட வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாதிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், நாங்கள் சிபோக் நகர பள்ளி மாணவிகள். திரும்பி வரவேண்டும் என எங்களுக்காக நீங்கள் அழுது கொண்டிருக்கும் ஒரு சிலரில் உள்ளவர்கள் நாங்கள்.
அல்லாவின் கருணையால், நாங்கள் இதுவரை திரும்பி வரவேயில்லை என ஒரு மாணவி கூறியுள்ளார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: