Tuesday, January 16, 2018

யாழ். பல்கலை கலைப்பீட விரிவுரைகளை மீள ஆரம்பிக்க முடிவு

Advertisement
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கலைபீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 18.01.2018ம் திகதியிலிருந்து (வியாழக்கிழமை) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: