Wednesday, November 29, 2017

கொழும்பில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டுக் குழு அதிரடி கைது

Advertisement

கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டனா் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த 3பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தற்போது யாழ் பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இதனடிப்படையில் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: