Wednesday, November 29, 2017

வீதியில் இளைஞரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற குழு

Advertisement
யாழ்ப்பாணம், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தள்ளிவிழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். எனினும் தம்மால் எவரும் கைதுசெய்யப்படவில்லைஎனவும் தமது பாவனையில் பச்சைநிற முச்சக்கர வண்டி இல்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்கடி ஆவா குழு உறுப்பினர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: