Sunday, March 4, 2018

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் ஆபத்தான நிலை

Advertisement
இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மேற்கொள்ளாமை காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்தில் பிரதான மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெகாவோட் மின்சார சக்தியை இணைக்கும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலை காரணமாக தனியார் நிறுவனங்களிடம் அவசர மின்சார கொள்வனவு செய்ய நேரிடும் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டமை இந்த நிலைமைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்திற்கு 200 மெகாவோட் மின்சார தேவை காணப்படுகின்ற நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சார பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொறியியலாளர் சங்கம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
Share This
Latest
Next Post

comments

0 comments: