Sunday, March 4, 2018

சிவன் கோவிலுக்குள் தஞ்சமடைந்த மைத்திரி! பொங்கியெழுந்த பௌத்த பிக்கு

Advertisement
மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு சிவன் கோவிலுக்கு நேற்று சென்ற ஜனாதிபதி மத வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த ஏரியை அவதானித்த ஜனாதிபதி, புனர்நிர்மாண பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள விகாரைக்கு வருகை தராமல் ஜனாதிபதி சிவன் கோவிலுக்கு சென்றுமைக்கு எதிராக, ஸ்ரீ மங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகினார்.
எனினும் நேற்றைய தினம் ஸ்ரீமங்கலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அவரின் நலம் விசாரித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி போராட்டம் நடத்தப்படவுள்ளமையை அறிந்து கொண்ட ஜனாதிபதி, விகாரைக்கு வருகை தந்ததாக சுமனரத்ன தேரர் ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்
விகாரைக்கு வருகைத்தந்த ஜனாதிபதி 15 நிமிடங்கள் மாத்திரமே அங்கு செலவிட்டுள்ளார் என தேரர் கூறியுள்ளார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: