Tuesday, October 10, 2017

வடமாகாணம் முழுவதுமான பூரண அடைப்பு

அரசியல் கைதிகளுக்கு  ஆதரவாக 13.10.2017 வெள்ளிக்கிழமை வடமாகணம் முழுவதுமான பூரண  உடைப்புக்கு 25 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புகள்  ஒன்றாக அழைப்பு விடுத்துள்ளன


Tuesday, October 3, 2017

பண மோசடி வழக்கு: தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைதாகி ஜாமினில் விடுவிப்பு

பண மோசடி வழக்கு: தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைதாகி ஜாமினில் விடுவிப்பு
பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆறரை லட்சம் பவுண்டுகள் கட்டி ஜாமினில் அவர் வெளியே வந்தார். அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கள்ளத்தனமாக கருப்புப்பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணை நிலையில் மட்டுமே உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவரது வக்கீல் தெரிவித்ததையடுத்து, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் விஜய் மல்லையா கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

எனினும், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களில் ஒரு பிரிவினருக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா, அல்-உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

உரிய அனுமதியின்றி தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தனிக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



13-ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பான சர்வதேச சட்ட நெறிமுறைகள் மற்றும்  அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைத்து சமர்ப்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் போது உணர்வு ரீதியாக அல்லாமல் சட்ட ரீதியாக வாதாடுமாறும் இருதரப்பினருக்கும் நீதிபதி அறிவுறை கூறினார்.https://tamilwinblog.blogspot.com/search/label/health